பதிவு செய்த நாள்
30 மே2016
07:44
புதுடில்லி : காற்றை மாசுபடுத்தும் பழைய வாகனங்களை ஒழித்துக் கட்டும் வகையில், புதிய திட்டத்தை கொண்டு வர திட்டமிடுகிறது, மத்திய அரசு.இந்தியாவில் ஓடும் வாகனங்களில் இரண்டு கோடியே, 80 லட்சம் வாகனங்கள், 11 ஆண்டுகள் பழைமையானவை. இவை கடுமையாக காற்றை மாசுபடுத்துகின்றன. இத்தகைய வாகனங்களை ஒப்படைத்தால், புதிய வாகனங்களை வாங்கும்போது, 8 முதல், 12 சதவீதம் வரை தள்ளுபடி தரும் வகையிலான திட்டம் குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.பழைய வாகனங்களை ஒப்படைப்பவர்களுக்கு மூன்று விதங்களில் ஆதாயம் அடைய வழிகளை கண்டறிந்துள்ளது அரசு. பழைய வாகனத்துக்கு ஸ்கிராப் மதிப்பு போடுவது, புதிய கார் வாங்கும்போது தள்ளுபடி தருவது, வாகன உற்பத்தியாளர்களிடமிருந்து சிறப்பு தள்ளுபடி மற்றும் கலால் வரியில் குறிப்பிட்ட அளவுக்கு விலக்கு என, மூன்று வழிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.இது குறித்து மக்கள் கருத்தையும் கேட்கிறது அரசு.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|