பதிவு செய்த நாள்
30 மே2016
07:45
மும்பை : வங்கிகள், வெளிநாட்டில் இருந்து, 1 சதவீத வட்டியில், 1 – 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெறும் தங்கத்தை, நகை வியாபாரிகளுக்கு, 3.5 – 6.5 சதவீத வட்டியில், கடனாக வழங்குகின்றன. இந்த கடனை, நகை வியாபாரிகள், ஆறு மாதங்களுக்குள் திரும்ப செலுத்தி, மீண்டும் கணக்கை புதுப்பித்துக் கொள்ளலாம். ‘இந்த கால வரம்பை குறைந்தபட்சம் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும்’ என, நகை வியாபாரிகள், நீண்ட காலமாக கோரி வருகின்றனர். இது குறித்து, இரு முறை வங்கிகள் மற்றும் நகை வியாபாரிகளுடன், ரிசர்வ் வங்கி பேச்சு நடத்தியது. இதையடுத்து, விரைவில் தவணைக் காலம் நீட்டிக்கப்படும் என, தெரிகிறது. தற்போது, தங்கம் மீதான கடனை புதுப்பிக்கும் போது, ஒவ்வொரு முறையும், வங்கிகள் சேவை கட்டணமாக ஒரு தொகையை பெறுகின்றன. தவணை காலம் நீட்டிக்கப்பட்டால், இந்த வருவாயுடன், தங்கம் விலை உயரும்போது கிடைக்கும் ஆதாயத்தையும், வங்கிகள் இழக்க நேரிடும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|