பதிவு செய்த நாள்
02 ஜூன்2016
13:01
புதுடில்லி : இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் 11 சதவீதமாக இருந்த உள்நாட்டு கார் விற்பனை, ஏப்ரல் மாதத்தில் 7 சதவீதமாக சரிவடைந்துள்ளது. கார்கள் மட்டுமின்றி வேன் மற்றும் போக்குவரத்து வாகனங்களின் விற்பனையும் சரிவடைந்துள்ளது. மாருதி, ஹூண்டாய் மற்றும் மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனங்களின் வாகன விற்பனை மட்டுமே மே மாதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.
டில்லியில் 2000 சிசி அல்லது அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட டீசல் என்ஜின் கார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் டொயோட்டா நிறுவனத்தின் வாகன விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டள்ளது. விற்பனை சரிவடைந்த போதிலும் டாடா மோட்டார்ஸ், ஹோண்டா போன்ற நிறுவனங்கள் புதிய மாடல்களையும் மே மாதத்தில் அறிமுகம் செய்துள்ளன.
இந்நிலையில் தற்போது உயர்த்தப்பட்டள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன விற்பனையை மேலும் பாதிக்கும் என கார் உற்பத்தி நிறுவனங்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. மே மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் மட்டுமே இரட்டை இலக்க விற்பனை சதவீதத்தை எட்டி உள்ளது. இந்நிறுவனத்தின் பலினோ கார் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் கார் விற்பனை 11 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|