தனிநபர் வருவாய் ரூ.93,293 ஆக உயர்வுதனிநபர் வருவாய் ரூ.93,293 ஆக உயர்வு ... அல்ட்ரா சவுண்ட் மூலம் சாக்லேட்டின் தரத்தை பரிசோதிக்கும் முறை கண்டுபிடிப்பு அல்ட்ரா சவுண்ட் மூலம் சாக்லேட்டின் தரத்தை பரிசோதிக்கும் முறை ... ...
ரகுராம் ராஜனே மீண்டும் கவர்னர் : தொழில்துறை கூட்டமைப்பு ஆதரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2016
15:10

ஒசாகா : ரகுராம் ராஜனே ரிசர்வ் வங்கி கவர்னராக மீண்டும் தொடர வேண்டும் என இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் நவ்ஷத் போர்ப்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன் ஜப்பான் சென்றுள்ள போர்ப்ஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்துள்ளார்.
பேட்டியில் போர்ப்ஸ் கூறுகையில், நிதியமைச்சரின் கருத்தை தான் நான் திரும்பவும் கூற விரும்புகிறேன். தனிப்பட்ட கருத்துக்கள், விமர்சனங்கள் ‌எதையும் நான் கூற விரும்பவில்லை. கவர்னராக அவர் நாட்டிற்கு பல நன்மைகளை செய்தள்ளார். அவரது பணியை சிறப்பாக செய்துள்ளார். அதனால் அவரை 100 சதவீதம் ஆதரிக்கிறோம். அவரது இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி கவர்னராக தொடர்ந்தால் நாட்டில் மேலும் பல முன்னேற்றங்கள் ஏற்படும் என நம்புகிறோம். பா.ஜ., எம்.பி., சுப்ரமணியசாமி, ரகுராம் ராஜன் பற்றி கூறிய கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனை ஜனநாயக அதிர்வின் ஓசையாகவே கருதுகிறோம் என தெரிவித்தார்.
ரகுராம் ராஜன் 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 3 ஆண்டு கால ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ரகுராம் ராஜனின் பதவி காலம் முடிவடைய உள்ளது. ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப்பேற்ற பிறகு இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருந்ததாக தொழில்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)