பதிவு செய்த நாள்
02 ஜூன்2016
15:10
ஒசாகா : ரகுராம் ராஜனே ரிசர்வ் வங்கி கவர்னராக மீண்டும் தொடர வேண்டும் என இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் நவ்ஷத் போர்ப்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன் ஜப்பான் சென்றுள்ள போர்ப்ஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்துள்ளார்.
பேட்டியில் போர்ப்ஸ் கூறுகையில், நிதியமைச்சரின் கருத்தை தான் நான் திரும்பவும் கூற விரும்புகிறேன். தனிப்பட்ட கருத்துக்கள், விமர்சனங்கள் எதையும் நான் கூற விரும்பவில்லை. கவர்னராக அவர் நாட்டிற்கு பல நன்மைகளை செய்தள்ளார். அவரது பணியை சிறப்பாக செய்துள்ளார். அதனால் அவரை 100 சதவீதம் ஆதரிக்கிறோம். அவரது இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி கவர்னராக தொடர்ந்தால் நாட்டில் மேலும் பல முன்னேற்றங்கள் ஏற்படும் என நம்புகிறோம். பா.ஜ., எம்.பி., சுப்ரமணியசாமி, ரகுராம் ராஜன் பற்றி கூறிய கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனை ஜனநாயக அதிர்வின் ஓசையாகவே கருதுகிறோம் என தெரிவித்தார்.
ரகுராம் ராஜன் 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 3 ஆண்டு கால ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ரகுராம் ராஜனின் பதவி காலம் முடிவடைய உள்ளது. ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப்பேற்ற பிறகு இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருந்ததாக தொழில்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|