பதிவு செய்த நாள்
05 ஜூன்2016
02:08
பெங்களூரு:இந்திய அஞ்சல் துறை, மின் வணிக நிறுவனமான, அமேசான் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக, அதன் அஞ்சல்களை வினியோகித்து வருகிறது. இதை நினைவுகூரும் வகையில், ‘மை ஸ்டாம்ப்’ என்ற சிறப்பு தபால்தலையை, அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இந்த தபால்தலையின் ஒருபுறம், குறிப்பிட்ட கட்டணத்தில், ஒருவர், தன் படத்தை அச்சிட்டுக் கொள்ளும் வசதியை, அஞ்சல் துறை வழங்குகிறது.
அமேசான் இந்தியா, அதன் வலைதளத்தில் வாடிக்கையாளர்கள் கோரும் பொருட்களை, அஞ்சல் துறை மூலமாக, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வருகிறது. இதில், குறிப்பாக, கிராமப்புற வாடிக்கையாளர்கள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர். இந்திய அஞ்சல் துறை, 1.55 லட்சம் அஞ்சலகங்கள் மூலம், 19 ஆயிரத்திற்கும் அதிகமான தபால் வட்டங்களில், அமேசான் வாடிக்கையாளர்களுக்கு, பொருட்களை வினியோகிக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|