பதிவு செய்த நாள்
07 ஜூன்2016
05:08
புதுடில்லி : ஆக்ராவில், ஐந்து நட்சத்திர ஓட்டல் அமைக்க லீலா குழுமம், கத்தார் நாட்டு நிறுவனங்கள் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக, ஐக்கிய அரபு நாடுகளுக்கு, சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த நிலையில், கத்தாரை சேர்ந்த கத்தார் அல் பைசல் குழுமம், லீலா குழுமத்துடன் இணைந்து, தாஜ்மஹால் அருகில், ஐந்து நட்சத்திர ஓட்டலை அமைப்பதற்கு ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த ஓட்டலில், 250 அறைகளுடன் கூடிய கட்டுமான பணி, 30 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, 500 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இதுகுறித்து, லீலா குழும அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஆக்ராவில், தாஜ்மஹாலில் இருந்து, ஒரு கி.மீ., துாரத்தில் அமைய உள்ள ஓட்டலில், 100 அறைகள் லீலா நிறுவனம் வசமும், 150 அறைகள், கத்தார் நிறுவனம் வசமும் இருக்கும்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|