பதிவு செய்த நாள்
09 ஜூன்2016
04:36
புதுடில்லி : ‘‘சேவைகள் சார்ந்த வர்த்தகத்தை சுலபமாக மேற்கொள்ள, ‘வர்த்தக வசதி ஒப்பந்தம்’ என்ற நடைமுறையை உருவாக்குவது குறித்து, இந்தியா, முதன் முறையாக, உலக வர்த்தக அமைப்பிடம் விண்ணப்பிக்க உள்ளது’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, 2015, நைரோபி உலக வர்த்தக மாநாட்டில், ஏற்கனவே இந்தியா கூறிய போதிலும், தற்போது, முதன் முறையாக, அதிகாரபூர்வமான கோரிக்கையை, உலக வர்த்தக அமைப்பிடம் அளிக்க உள்ளது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில், சேவைத்துறை சார்ந்த விசா நடைமுறைகள் எளிமையாகும். வர்த்தகர்களுக்கு, நீண்டகால விசா வசதி கிடைக்கும்; அவர்கள், சுலபமாக சர்வதேச பயணங்களை மேற்கொள்ளலாம். மேலும், உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, சேவைத்துறை சார்ந்த அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வுகாண, ஒப்பந்தம் வழிவகுக்கும்.
சர்வதேச சேவைத்துறை நிறுவனங்கள் இடையிலான தகராறுகளுக்கு தீர்வு காண்பதற்கும், ஒப்பந்தம் துணைபுரியும். இதன் மூலம், இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளைச் சேர்ந்த சேவைத்துறை நிறுவனங்களும் பயன்பெறும். தற்போது, சரக்குகள் துறைக்கான, ‘வர்த்தக வசதி ஒப்பந்தம்’ உலக வர்த்தகஅமைப்பின் அங்கீகாரத்திற்காக காத்திருக்கிறது ; மூன்றில் ஒரு பங்கு ஆதரவு கிடைத்தவுடன், இது நடைமுறைக்கு வரும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|