பதிவு செய்த நாள்
12 ஜூன்2016
01:26
புதுடில்லி:இந்தாண்டின், முதல் மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு, ஏப்ரலில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி குறியீடு, மைனஸ் 0.8 சதவீதமாக, பின்னடைவைக் கண்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:தொழில் துறை உற்பத்தி குறியீடு, ஜனவரியில், 1.6 சதவீதம், பிப்ரவரியில் 2 சதவீதம், மார்ச்சில், மறுமதிப்பீட்டில், 0.3 சதவீதம் என்ற அளவில் இருந்தன. ஏப்ரலில், தயாரிப்பு துறை உற்பத்தி, மைனஸ் 3.1 சதவீதம் என்ற அளவில் பின்னடைவைக் கண்டுள்ளது. இது, 2015 ஏப்ரலில், 3.9 சதவீதமாக இருந்தது. ஏப்ரலில், பொறியியல் சாதனங்கள் உற்பத்தி, 25 சதவீதம் குறைந்துள்ளது. இப்பிரிவில், கடந்த ஆண்டு ஏப்ரலில், 5.5 சதவீத வளர்ச்சி காணப்பட்டது. ஏப்ரலில், மின் உற்பத்தி, 14.6 சதவீதம்; சுரங்க உற்பத்தி, 1.4 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|