பதிவு செய்த நாள்
12 ஜூன்2016
01:27
புதுடில்லி:மத்திய அரசு, சூரிய சக்தி மின்சாரம் மூலம் விசைத்தறி பயன்படுத்தும் உரிமையாளர்களுக்கு, மானியம் வழங்க உள்ளது.
இதுகுறித்து, மத்திய ஜவுளி துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறியதாவது:மத்திய அரசு, சுற்றுச்சூழலை பாதிக்காத, மின் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, சூரிய சக்தி மின்சாரம் மூலம், விசைத்தறி பயன்படுத்துவோருக்கு, 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. அதன்படி, பொது பிரிவினருக்கு, 3.75 லட்சம் ரூபாய்; ஓ.பி.சி., பிரிவினருக்கு, 5.62 லட்சம் ரூபாய்; எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினருக்கு, 6.75 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும். இவை, ஆக., 15ம் தேதி முதல் வழங்கப்படும். விசைத்தறி பயன்படுத்துவோர், தினமும், 500 ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவதற்கான நடவடிக்கையை, மத்திய அரசு எடுக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|