பதிவு செய்த நாள்
12 ஜூன்2016
01:28
ஜெய்ப்பூர்:புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மாத காலத்துக்குள்ளாகவே ஹோண்டா பி.ஆர்.வி., காரை, 9,000க்கும் மேற்பட்டோர், ‘புக்’ செய்துள்ளனர்.இதுகுறித்து, இந்நிறுவனத்தின் மூத்த துணை தலைவரும், இயக்குனருமான ராமன் குமார் ஷர்மா கூறியதாவது:கடந்த மே 5ம் தேதி, நாங்கள் ஹோண்டா பி.ஆர்.வி., காரை அறிமுகம் செய்தோம். இதுவரை இந்த காரை வாங்குவதற்காக 9,000க்கும் அதிகமானவர்கள் புக் செய்திருக்கின்றனர்.
சந்தையில் எங்கள் இடத்தை தொடர்ந்து தக்கவைத்து வருகிறோம். வாடிக்கையாளர்களும் அதிகரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு டீசல் கார்கள், 40 சதவீதமும், பெட்ரோல் கார்கள், 60 சதவீதமும் விற்பனை ஆகியுள்ளன. இந்த ஆண்டு, டீசல் கார் விற்பனையோடு ஒப்பிடும்போது, பெட்ரோல் கார் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு விற்பனையில் பெட்ரோல் கார், 72 சதவீதத்தை எட்டும் என கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|