பதிவு செய்த நாள்
12 ஜூன்2016
01:57
புதுடில்லி:வங்கிகளின் வாராக்கடன் பிரச்னைக்கு தீர்வு காண, பொதுத்துறை வங்கிகளின் இயக்குனர் குழுவுக்கு அதிக அதிகாரம் வழங்கி, ‘சொத்து மீட்பு வங்கி’ என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்’ என, ‘அசோசெம்’ அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன் விவரம்:உருக்கு, கட்டுமானம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் வாராக்கடன் அதிகரித்துள்ளது. இக்கடன்களை மறுசீரமைப்பதற்கான முடிவுகளை, பொதுத்துறை வங்கிகள் மிகுந்த நம்பிக்கையுடன் எடுக்க வேண்டு மென்றால், அவற்றின் இயக்குனர் குழுவுக்கு உரிய அதிகாரம் வழங்க வேண்டும். இத்துடன், சொத்து மீட்பு வங்கி என்ற அமைப்பை உருவாக்க வேண்டும். இந்த அமைப்பின் வழிகாட்டுதலுடன், இயக்குனர் குழுவுக்கு, வாராக்கடன்களுக்கான மொத்த வட்டித் தொகையை எந்த அளவிற்கு தள்ளுபடி செய்யலாம் என, முடிவெடுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும். இந்த இரு திட்டங்களையும், தாமதமின்றி உடனடியாக செயல்படுத்த வேண்டும். சீன அரசு, 2000ம் ஆண்டு துவக்கத்தில், வங்கிகளின், 40 ஆயிரம் கோடி ரூபாய்வாராக்கடனை சமாளிக்க, இத்தகைய நடவடிக்கையை எடுத்து, வெற்றி கண்டுள்ளது. அதை இந்தியாவும் பின்பற்ற வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கேற்ப, ஓராண்டில், 12 ஆயிரம் கோடி ரூபாய் முதல், 14 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான வாராக்கடன்களை தள்ளுபடி செய்வதால், எந்த பாதிப்பும் நேராது. அது, இயல்பான வர்த்தக நடைமுறையில் ஏற்படும் இடர்ப்பாடாக தான் கருதப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|