பதிவு செய்த நாள்
18 ஜூன்2016
07:36
புதுடில்லி : மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஏற்றுமதியில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த வீழ்ச்சி தடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம், ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவு, 0.79 சதவீதம் என்ற அளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளது. தற்போது, ஏற்றுமதி சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. தொழில் துறையில், பல்வேறு பிரிவுகளின் ஏற்றுமதி உயரத் துவங்கியுள்ளது. மத்திய அரசு, ஏற்றுமதியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி ஏற்றுமதியாளர்களுக்கு அளிக்கப்படும், வட்டி மானியம் உள்ளிட்ட பல்வேறு ஊக்கச் சலுகைகளால், ஏற்றுமதி, சரிவு நிலையில் இருந்து மீண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். நாட்டின் ஏற்றுமதி, தொடர்ந்து, 18வது மாதமாக, கடந்த மே மாதம், 0.79 சதவீதம் குறைந்து, 2,217 கோடி டாலராக சரிவடைந்தது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 2,235 கோடி டாலராக இருந்தது. இந்தாண்டு ஏப்ரலில், ஏற்றுமதி, 6.74 சதவீதம் சரிவடைந்து, 2,057 கோடி டாலராக இருந்தது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 2,205 கோடி டாலராக அதிகரித்து காணப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|