பதிவு செய்த நாள்
20 ஜூன்2016
23:57
மும்பை : ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பதவிக் காலம், வரும் செப்., 4ல் முடிவடைகிறது. இந்நிலையில் ‘பணி நீட்டிப்பை விரும்பவில்லை’ என, ரகுராம் ராஜன் அறிவித்துள்ளார். அதனால், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னரை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது. இந்நிலையில், உலக நாடுகளின் கடன் தகுதியை மதிப்பிட்டு, அவற்றுக்கான குறியீட்டை வழங்கி வரும், பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம், ‘ரகுராம் ராஜன் விலகினாலும், இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது’ என, தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் நடவடிக்கையால், நுகர்வோர் விலை பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. வங்கிகளின் நிதிநிலையும் வலுப்பெற்று வருகிறது. இந்த நடவடிக்கைகளை அப்படியே தொடர, புதிய கவர்னருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.தனி நபரை விட, கொள்கைகளும், அவற்றின் செயலாக்கமும்தான் மிகவும் முக்கியம் என, பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|