பதிவு செய்த நாள்
21 ஜூன்2016
00:01
மும்பை : மஹாநகர் காஸ் நிறுவனம், பங்கு சந்தையில், இன்று, பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட உள்ளது. பொதுத்துறையை சேர்ந்த காஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா மற்றும் பிரிட்டிஷ் ஏசியா பசிபிப் ஹோல்டிங்ஸ் இணைந்து உருவாக்கியது தான், மஹாநகர் காஸ் நிறுவனம். இந்த நிறுவனம், சி.என்.ஜி., எரிவாயு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது.மஹாநகர் நிறுவனம், எதிர்கால திட்டங்களுக்கு தேவையான நிதியை, பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு, அதன் மூலம் திரட்டிக் கொள்ள முடிவு செய்தது. அதன்படி, அந்த நிறுவனத்தின் பங்கு வெளியீடு, இன்று துவங்குகிறது. இதன் மூலம், மஹாநகர் நிறுவனம், 1,040 கோடி ரூபாய் திரட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் பங்கு வெளியீட்டு பணிகளை, கோட்டக் மகிந்திரா கேபிட்டல் கம்பெனி மற்றும் சிட்டி குரூப் குளோபல் மார்க்கெட் இந்தியா நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|