பதிவு செய்த நாள்
23 ஜூன்2016
04:51
புதுடில்லி : அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் குழுமம், கோல்கட்டாவில், 650 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது. அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் குழுமம் மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 650 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு திட்டமிட்டு உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் மருத்துவ கல்லுாரி, வயிறு மற்றும் குடல் தொடர்பான நோய்களுக்கான ஆய்வு நிறுவனத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் கிழக்கு மண்டல தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ரூபாலி பாசு கூறியதாவது: வயிறு மற்றும் குடல் தொடர்பான நோய்களுக்கு, 120 படுக்கை அறைகளுடன் கூடிய பயிலகத்தை, 50 கோடி ரூபாய் செலவில் அமைக்க உள்ளது. பேட்டாநகர் என்ற இடத்தில், 14 ஏக்கரில், 400 கோடி ரூபாய் செலவில், மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|