பதிவு செய்த நாள்
23 ஜூன்2016
04:52
மும்பை : போர்ஸ் மோட்டார்ஸ், மஹாராஷ்டிர மாநிலம், பூனாவில், புதிய தொழிற்சாலை ஒன்றை அமைத்துள்ளது. இந்த ஆலை, ஆண்டுக்கு, தலா, 20 ஆயிரம் இன்ஜின்களை தயாரிக்கும் திறன் உடையது. ஆலையை, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் துவக்கி வைத்தார். போர்ஸ் நிறுவனம், பூனா ஆலையில் தயாரிக்கும், இன்ஜின் மற்றும் சாதனங்களை, சொகுசு கார் விற்பனையில் முன்னணியில் உள்ள மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு சப்ளை செய்ய உள்ளது. மொத்தம், 1.30 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டு உள்ள ஆலையின் மூலம், 200 பேருக்கு நேரடியாக வேலை கிடைத்து உள்ளது. இங்கு, 14 வகையான இன்ஜின்களை தயாரிக்க, போர்ஸ் திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, அந்த நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த, 45 ஆண்டுகளாக, மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்திடம், சிறப்பான உறவு கொண்டு உள்ளோம். எங்கள் நிறுவனம், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 700 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. அதில், ஒரு பகுதியாக, 100 கோடி ரூபாயில், புதிய ஆலை அமைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|