பதிவு செய்த நாள்
28 ஜூன்2016
07:12
புதுடில்லி : நாட்டில் உள்ள முக்கிய ஏழு நகரங்களில், வீடுகள் விற்பனை, 1.58 லட்சமாக குறைந்துள்ளதாக, ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனமான ஜே.எல்.எல்., இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவில், குறித்த காலத்தில் கட்டுமான பணிகளை முடிக்காதது, ‘விலை குறையும் போது வீடுகள் வாங்கலாம்’ என்ற மக்களின் எண்ணம் உள்ளிட்ட காரணங்களால், ரியல் எஸ்டேட் சந்தை, கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.இதன் விளைவாக, டில்லி என்.சி.ஆர்., கோல்கட்டா, சென்னை, ஐதராபாத், மும்பை, பெங்களூரு, பூனா ஆகிய ஏழு முக்கிய நகரங்களில், கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், வீடுகள் விற்பனை, 1.58 லட்சமாக குறைந்துள்ளது. இதுவே, முந்தைய நிதி ஆண்டில், 1.61 லட்சம் என்றளவில் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், தற்போது, வட்டி குறைப்பு, விலை சரிவு போன்ற காரணங்களால், வீடுகள் விற்பனை உயர்ந்து வருகிறது. இதனால், இந்த ஆண்டின், முதல் காலாண்டில், 42 ஆயிரத்து, 521 வீடுகள் விற்பனையாகி உள்ளன. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 39 ஆயிரமாக இருந்ததாக, அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|