பதிவு செய்த நாள்
04 ஜூலை2016
07:18
கோல்கட்டா : ஏசஸ் நிறுவனம், ஸ்மார்ட் போன் விற்பனையில், தன் பங்களிப்பை மேலும் அதிகரிக்க திட்டமிடுகிறது.இந்தியாவின் ஸ்மார்ட் போன் சந்தையில், ஏசஸ் நிறுவனம், 2.5 சதவீதத்தை தன்வசம் வைத்திருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் விலை, 6,000 ரூபாய் முதல், 15 ஆயிரம் ரூபாய் இருந்தாலும், 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் விலையிலான பொருட்களே அதிகம் விற்பனை ஆகின்றன.இந்நிலையில், பிரீமியம் ரேஞ்சில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளது, ஏசஸ் நிறுவனம். இதன் மூலம், மாதாந்திர சராசரி விற்பனை அளவான, 2 லட்சம் போன்கள் என்ற எண்ணிக்கையும் உயரும்; விற்பனை ஆகும் போன்களின் விலையின் சராசரியும் உயரும் என்று கருதுகிறது.இருபது சதவீத வளர்ச்சியை எட்டிப்பிடிக்க இருப்பதாக, தைவானை சேர்ந்த இந்நிறுவனம் தெரிவித்தாலும்,தற்போது பெருமளவு தயாரிப்புகளை இறக்குமதி செய்தே சமாளித்து வருகிறது என்பதால், இலக்கை அடைய மேலும் சில காலம் ஆகலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|