பதிவு செய்த நாள்
04 ஜூலை2016
07:22
புதுடில்லி : ‘நாட்டின் சிமென்ட் தேவை, நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், 6 சதவீதம் அதிகரிக்கும்’ என, ‘இக்ரா’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன் விவரம்: கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், நாட்டின் சிமென்ட் தேவை, ஏற்ற, இறக்கமின்றி இருந்தது. தற்போது, நெடுஞ்சாலை, குடியிருப்பு திட்டங்கள் உட்பட, அடிப்படை கட்டமைப்பு துறை சார்ந்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இதனால், நடப்பு நிதியாண்டில், சிமென்டிற்கான தேவை, 6 சதவீதமாகவும், 2017 – 18ம் நிதியாண்டில், 7 சதவீதமாகவும் உயரும். பருவமழை நன்கு இருக்கும் என்பதால், கிராமப்புறங்களிலும், வரும் மாதங்களில் சிமென்ட் தேவை அதிகரிக்கும்.
ஆந்திராவில் துவங்கியுள்ள, புதிய தலைநகரின் நிர்மாணப் பணிகள், தெலுங்கானாவில் நடைபெற்று வரும், நீர் பாசனம் மற்றும் அணைக்கட்டு திட்டங்களும், சிமென்டிற்கான தேவையை அதிகரிக்கச் செய்யும். வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில், சிமென்ட் உற்பத்தி அதிகரித்துள்ளது. இது, சிமென்ட் தேவையை சமாளிக்கும் அளவிற்கு இருக்கும். சிமென்ட் நிறுவனங்களை கையகப்படுத்தும் போது, சுண்ணாம்பு சுரங்க ஒதுக்கீட்டையும் மாற்ற, தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், சிமென்ட் துறையில் நுழையும் நிறுவனங்களுக்கு, தடையின்றி மூலப்பொருட்கள் கிடைக்கும். இது, சிமென்ட் துறையை ஊக்குவித்து, புதிய முதலீடுகளை ஈர்க்க உதவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|