பதிவு செய்த நாள்
06 ஜூலை2016
05:00
புதுடில்லி : டாடா குழுமத்தைச் சேர்ந்த, டைடன் நிறுவனம், ‘தனிஷ்க்’ என்ற பிராண்டு பெயரில், தங்க நகைகளின் விற்பனையில் ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, தங்க நகைகள் மீது கலால் வரி விதித்ததை எதிர்த்து, ஏப்., மாதத்தில், நகை கடை உரிமையாளர்கள், கடைகளை மூடி, தொடர் போராட்டம் நடத்தினர். அப்போது, நிறுவனத்தின் தங்க நகை விற்பனை பாதிக்கப்பட்டது. போராட்டம் முடிவிற்கு வந்ததை அடுத்து, அட்சய திருதியையின் போது, தங்க நகை விற்பனை லேசாக சூடுபிடித்தது. அதை தொடர்ந்து வந்த திருமண சீசனில், தங்க நகை விற்பனை களை கட்டத் துவங்கியது. இதனால், கடந்த ஏப்., – ஜூன் வரையிலான காலாண்டில், நிறுவனத்தின் விற்பனை சிறப்பாக இருந்தது. மத்திய அரசு, 2 லட்சத்திற்கு மேல் தங்க நகை வாங்குவோர், ‘பான்’ எண் வழங்க வேண்டும் என, பிறப்பித்த உத்தரவால், சிறிதளவு பாதிப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|