பதிவு செய்த நாள்
24 ஜூலை2016
00:54
சண்டிகர்:ரிலையன்ஸ் நிப்பான் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் அண்மையில், ‘இன்கிரீஸிங் மணி பேக் பிளான்’ எனும், புதிய இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்தது.இந்த அறிமுக நிகழ்ச்சியின்போது, இந்நிறுவனத்தின் தலைமை நிறுவன அதிகாரி மனோரஞ்சன் ஷாகு கூறியதாவது:ரிலையன்ஸ் நிப்பான் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், தன் பிரீமியம் வசூலை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இத்துறையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கவும் முடிவு செய்துள்ளது. அதற்காக, 30 ஆயிரம் முகவர்களை இந்த நிதியாண்டில் நியமிக்க இருக்கிறோம்.புதிதாக நியமிக்கப்பட இருக்கும் இவர்களையும் சேர்த்தால், எங்களது முகவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 30 ஆயிரமாக அதிகரிக்கும். புதிய முகவர்களை நாடெங்கிலும் இருக்கும் எங்களுடைய, 800 கிளை அலுவலகங்கள் மூலமாக நியமிக்க இருக்கிறோம்.கடந்த நிதியாண்டில், 3.60 லட்சம் பாலிசிகளை விற்பனை செய்திருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|