பதிவு செய்த நாள்
29 ஜூலை2016
04:02
புதுடில்லி : ‘ஸ்மார்ட் போன்’ விற்பனையில், ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, ‘சாம்சங்’ நிறுவனம் முன்னணியில் உள்ளது.
உலகம் முழுவதும், மொபைல் போன் பயன்பாடு அதிகரித்து வருவதால், அதன் தயாரிப்பில் ஈடுபட்டு உள்ள சாம்சங், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள், நவீன தொழில்நுட்பத்தில், புதிய வகை போன்களை அறிமுகம் செய்து வருகின்றன.அதன்படி, சாம்சங் நிறுவனம், ‘கேலக்சி எஸ் 7, கேலக்சி எஸ் 7 எட்ஜ்’ ஆகிய மாடல்களில், ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து உள்ளது.
இதையடுத்து, கடந்த ஏப்., முதல் ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில், சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் விற்பனை, ஒன்பது கோடியாக அதிகரித்து உள்ளது. இதே காலத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை, நான்கு கோடி என்ற எண்ணிக்கையில் உள்ளது.இதையடுத்து, நடப்பாண்டில், சாம்சங் நிறுவனம், கேலக்சி மாடல்களில், அதிக ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|