பதிவு செய்த நாள்
29 ஜூலை2016
04:03
புதுடில்லி : மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நகை தயாரிப்பாளர்கள் மீது, 2 கோடி ரூபாய்க்கும் குறைவான வரி ஏய்ப்பு புகார் இருந்தால், அவர்கள் கைது செய்யப்பட மாட்டர்; அவர்கள் மீது, வழக்கும் பதிவு செய்யப்பட மாட்டாது. அதுபோல, 75 லட்சம் ரூபாய்க்கு குறைவான வரி ஏய்ப்பு புகாரின் பேரில், நகை தயாரிப்பாளர்களின் வீடுகளில், வருவாய் துறை அதிகாரிகள் சோதனை செய்யவோ, நகைகளை பறிமுதல் செய்யவோ மாட்டர். அது போன்ற நிகழ்வில், முன்னதாக நகை வியாபாரிகளுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பப்படும். முழுமையாக தயாரித்து முடிக்கப்படாத நகைகள் அல்லது முழுமையாக தயாரான நகைகளை எடுத்துச் செல்வோரை, கலால் துறை அதிகாரிகள், தடுத்து சோதனையிட மாட்டர். நகை வியாபாரிகள், ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவாக வரி செலுத்தியிருந்தால், அவர்களுக்கு, முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, கலால் வரி கணக்கு தணிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|