பதிவு செய்த நாள்
31 ஜூலை2016
23:41
புதுடில்லி : வணிக முத்திரை சான்றிதழ் வழங்குவது தொடர்பான அனைத்து நடைமுறைகளும், ‘டிஜிட்டல்’ மயமாக்கப்பட்டுள்ளதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை இன்று முதல், அமலுக்கு வருகிறது.
இதன்படி, வணிக முத்திரைக்காக விண்ணப்பிப்போர், கணினி வாயிலாகவே, வணிக முத்திரை பதிவுச் சான்றிதழ் பெற முடியும்.‘வணிக முத்திரையை பதிவு செய்வதற்கு வரும் விண்ணப்பங்கள், சான்றிதழ் தயாரிப்பு, பதிவு செய்த சான்றிதழை விண்ணப்பதாரருக்கு வழங்குதல் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும், கணினிமயமாக்கப்பட்டுள்ளன’ என, பொது காப்புரிமை, வடிவமைப்பு மற்றும் வணிகமுத்திரை கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தாண்டு, பிப்., 1 நிலவரப்படி, காப்புரிமை மற்றும் வணிக முத்திரை பதிவுக்காக, முறையே, 2,37,029 மற்றும் 5,44,171 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. தற்போது, வணிக முத்திரை பதிவு சான்றிதழ், விண்ணப்பித்த எட்டு மாதங்களில் கிடைக்கிறது. இதை, ஒரு மாதமாக குறைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வரும், 2017 மார்ச்சுக்குள், விண்ணப்பித்த ஒரு மாதத்தில், வணிக முத்திரை சான்றிதழ் பெறும் நடைமுறையை அமல்படுத்த, திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கூடுதலாக 100 ஆய்வாளர்களை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் அமர்த்தியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|