பதிவு செய்த நாள்
02 ஆக2016
23:32
புதுடில்லி : பேடிஎம், சினிமா டிக்கெட் முன்பதிவு செய்வதை, மூன்று மடங்காக அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது.
பேடிஎம் நிறுவனம், ரீசார்ஜ் செய்தல், சினிமா டிக்கெட் முன்பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது, பேடிஎம் மூலம், 2,250 திரை அரங்குகளில், சினிமா டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதன் மூலம், ஒரு மாதத்திற்கு, 30 லட்சம் பேர் டிக்கெட் பதிவு செய்கின்றனர். வரும் மாதங்களில், 3,000 திரை அரங்குகளுக்கு, முன்பதிவு வசதியை விரிவுபடுத்த உள்ளது, பேடிஎம்.
இதையடுத்து, நடப்பு நிதியாண்டு இறுதிக்குள், மாதந்தோறும், சினிமா டிக்கெட் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையை, ஒரு கோடியாக அதிகரிக்க, அந்த நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள, 10 முக்கிய நகரங்களில், இணையதளம் வாயிலாக சினிமா டிக்கெட் முன்பதிவு செய்வதில், பேடிஎம் நிறுவனத்தின் பங்கு, 30 – 35 சதவீதம் என்றளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|