பதிவு செய்த நாள்
02 ஆக2016
23:38
மும்பை : நகரம் முதல் குக்கிராமம் வரை, வங்கிச் சேவையை விரிவுபடுத்த, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவற்றில், ‘யுனிவர்சல் பேங்க்’ என்ற, பன்முக வங்கிச் சேவை திட்டமும் ஒன்று.
தற்போது, வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவை அளிக்கும் வெவ்வேறு நிதிச் சேவைகள் அனைத்தையும், பன்முக வங்கிகள் ஒருசேர வழங்கும். அத்துடன், வணிக வங்கிச் சேவை, முதலீடு, காப்பீடு, மியூச்சுவல் பண்டு உள்ளிட்ட, பிற நிதிச் சேவைகள் அனைத்தையும், பன்முக வங்கிகள் அளிக்கும். பல்வேறு பொருட்களை, ‘சூப்பர் மார்க்கெட்’ எப்படி வழங்குகிறதோ, அது போல, அனைத்து விதமான நிதிச் சேவைகளையும், வாடிக்கையாளர்கள், ஒரு பன்முக வங்கியின் கீழ் பெறலாம். இவ்வங்கி உரிமத்திற்கான விதிமுறைகளை, ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது.
அதன் விபரம் :* வங்கி மற்றும் நிதித் துறையில், 10 ஆண்டுகள் அனுபவமுள்ள தனிநபர், நிறுவனங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், பன்முக வங்கி துவங்கலாம் * பன்முக வங்கியில் குறைந்தபட்சம், 500 கோடி ரூபாய் பங்கு மூலதனம் மேற்கொள்ள வேண்டும்; கார்ப்பரேட் நிறுவனங்கள், 5,000 கோடி ரூபாய் சொத்து மதிப்பை கொண்டிருக்க வேண்டும்* கார்ப்பரேட் நிறுவனங்களின் மொத்த வருவாயில், அவற்றின் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வருவாய், 40 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால், பன்முக வங்கி துவங்க உரிமம் பெறலாம்; அதற்கு மேல் இருந்தால், உரிமம் வழங்கப்பட மாட்டாது* அத்தகைய தொழிற்குழுமங்கள், பன்முக வங்கிகளில், 10 சதவீதம் பங்கு முதலீடு மேற்கொள்ள அனுமதிக்கப்படும். ரிசர்வ் வங்கியின் மேற்கண்ட விதிமுறைகள் காரணமாக, ரிலையன்ஸ், லார்சன் அண்டு டூப்ரோ, பஜாஜ் போன்ற தொழிற்குழுமங்கள், பன்முகவங்கி துவங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|