பதிவு செய்த நாள்
05 ஆக2016
00:20
புதுடில்லி : முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், விரைவில் மொபைல் போன் சேவையில், அதிகாரப்பூர்வமாக களமிறங்க உள்ளது. மேலும், ‘டிவி’, திரைப்படம் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும், மொபைல் போனில் வழங்க உள்ளது. இதற்காக இந்நிறுவனம், சர்வதேச அளவில் அதிவேகமான தகவல் தொடர்பு வசதிக்காக, மும்பையில், கடலுக்கு அடியில் கேபிள் பதிக்க உள்ளது. இத்திட்டத்திற்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. கடல்வாழ் உயிரினங்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில், கேபிள்களை பதிக்கவும், பணி முடிந்த பின், அப்பகுதியை பாதுகாப்பாக மூட வேண்டும் என்றும், ரிலையன்ஸ் ஜியோவுக்கு, நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. ஆசிய, ஆப்ரிக்க, ஐரோப்பிய கண்டங்களை, தொலைத்தொடர்பு வசதியுடன் இணைக்கும், ‘ஏ.ஏ.இ – 1’ என்ற திட்டத்தின் கீழ், ரிலையன்ஸ் ஜியோ, 40 கோடி ரூபாய் முதலீட்டில், இந்திய பகுதியில் கேபிள் பதிக்கும் பணியை மேற்கொள்ள உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|