பதிவு செய்த நாள்
07 ஆக2016
01:37
சென்னை:ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம், தன் தொழிற்சாலை ஒன்றின் உற்பத்தி திறனை ஆண்டுக்கு, 2 லட்சம் கிலோ லிட்டராக அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது.ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம், தமிழகத்தில் உள்ள தன் தொழிற்சாலையின் உற்பத்தி திறனை, ஆண்டுக்கு 2 லட்சம் கிலோ லிட்டராக அதிகரிக்க இருக்கிறது. ஆனால், இதற்காக எவ்வளவு முதலீடு செய்ய இருக்கிறது என்பது குறித்து, அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.
பங்கு சந்தைக்கு கொடுத்திருக்கும் அறிவிப்பில், தமிழகத்தில், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள வாட்டர் பேஸ்டு பெயின்ட் உற்பத்தி திறனை, 1 லட்சத்து 40 ஆயிரம் கிலோ லிட்டரில் இருந்து, 2 லட்சம் கிலோ லிட்டராக அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.மேலும் குஜராத் மாநிலத்தில் உள்ள அங்லேஸ்வர் ஆலையில், உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், தயாரிப்பு கலவையில் மாறுதல் செய்ய இருப்பதாகவும் பங்குச் சந்தைக்கு தெரிவித்திருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|