பதிவு செய்த நாள்
07 ஆக2016
01:38
சென்னை:கெவின் கேர் நிறுவனம், ஷாம்பூ விற்பனை மூலமாக, 100 கோடி ரூபாய் வருவாயை எதிர்பார்க்கிறது.நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான, கெவின் கேர், தன் கார்த்திகா ஷாம்பூ மூலமாக, 100 கோடி ரூபாய் வருவாயை எட்டுவதற்காக திட்டமிட்டு வருகிறது. கார்த்திகா ஷாம்பூ ஆந்திர மாநிலத்தில், 2006ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
விரைவில் நாடு முழுவதும் சந்தைப்படுத்தப்பட இருக்கிறது.இதுகுறித்து, இந்நிறுவனத்தின் நிறுவனரும், தலைவருமான சி.கே.ரங்கநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:மூலிகை பொருட்களுக்கான சந்தை பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், கார்த்திகா ஷாம்பூவிற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இதையடுத்து வரும், 2017ல், 100 கோடி ரூபாய்க்கு விற்றுமுதலை எட்டுவோம் என கருதுகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|