பதிவு செய்த நாள்
08 ஆக2016
07:21
கோல்கட்டா : பாட்டா நிறுவனம் 80 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரை மூலதன செலவு செய்ய திட்டமிடுகிறது.
பாட்டா நிறுவனம், தன் ஆலைகளை நவீனப்படுத்தவும், சந்தைப்படுத்துதல் மற்றும் சில்லரை விற்பனை ஆகியவற்றுக்குமாக ஒவ்வொரு ஆண்டும் 80 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரை 2 முதல் 3 ஆண்டுகள் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, பாட்டா இந்தியாவின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான, ராஜீவ் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாட்டா நிறுவனத்தின் மிகப் பழைமையான ஆலையான பாட்டாநகர் ஆலையை, அடுத்த இரண்டு ஆண்டுகளில், 20 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்த உள்ளோம். இதன் மூலமாக அதன் உற்பத்தி திறன் 10 சதவீதம் அதிகரிக்கும். மேலும், ஆன்லைன் மூலமான விற்பனையை தற்போதைய 1.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|