எத்­த­னா­லுக்கு மீண்டும் கலால் வரி:சர்க்­கரை நிறு­வ­னங்கள் போர்க்­கொடிஎத்­த­னா­லுக்கு மீண்டும் கலால் வரி:சர்க்­கரை நிறு­வ­னங்கள் போர்க்­கொடி ... நாட்டின் வர்த்­தக பற்­றாக்­குறை குறைந்­தது நாட்டின் வர்த்­தக பற்­றாக்­குறை குறைந்­தது ...
சுற்­றுச்­சூழல் பாதிப்பு...டீசல் கார் தான் கார­ணமா?உண்­மையை ஆராய கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2016
06:09

புது­டில்லி:‘டீசல் கார்­களால் தான் சுற்­றுச்­சூழல் பாதிக்­கப்­ப­டு­கி­றது என்ற குற்­றச்­சாட்டின் உண்­மைத்­தன்மை குறித்து, ஆராய வேண்டும்’ என, இந்­திய வாகன தயா­ரிப்­பா­ளர்கள் கூட்­ட­மைப்பு, மத்­திய அரசை வலி­யு­றுத்தி உள்­ளது. சுற்­றுச்­சூழல் மாசு வழக்கில், டில்­லியில், எட்டு மாதங்­க­ளாக, 2,000 சி.சி., மற்றும் அதற்கு மேற்­பட்ட இன்ஜின் திறன் கொண்ட டீசல் வாக­னங்­க­ளுக்கு தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.
இத்­த­டையை நேற்று முன்­தினம் நீக்­கிய சுப்ரீம் கோர்ட், ‘டீசல் கார் தயா­ரிப்பு நிறு­வ­னங்கள், 1 சத­வீத பசுமை வரியை செலுத்த வேண்டும்’ என, உத்­த­ர­விட்­டுள்­ளது. இதை வர­வேற்று இந்­திய வாகன துறை­யினர் கருத்து தெரி­வித்­துள்­ளனர்.விஷ்ணு மாதுார், டைரக்டர் ஜெனரல், இந்­திய வாகன தயா­ரிப்­பா­ளர்கள் கூட்­ட­மைப்பு: சுப்ரீம் கோர்ட் உத்­த­ரவு, வாகன தயா­ரிப்பு துறைக்கு நிம்­மதி அளித்­துள்­ளது. சுற்­றுச்­சூ­ழலை மாசு­ப­டுத்­து­வதில் டீசல் கார்­களின் பங்கு, மிகவும் குறைவு. அதனால், சுற்­றுச்­சூழல் மாசு­பாட்­டிற்­கான உண்மை கார­ணத்தை கண்­டு­பி­டித்து தீர்வு காண, மத்­திய அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.
சேகர் விஸ்­வ­நாதன், இயக்­குனர், டொயோடா கிர்­லோஸ்கர் மோட்டார்: அனைத்து விதி­மு­றை­களை பின்­பற்­றியே வாகனம் தயா­ரிக்­கப்­ப­டு­கி­றது. கட்­டா­யத்தின் பேரில், பசுமை வரி செலுத்த முன்­வந்­துள்ளோம். இந்த முடிவை, சுப்ரீம் கோர்ட் முன்­ன­தா­கவே எடுத்­தி­ருந்தால், வாகன துறைக்கு, பாதிப்பு குறை­வாக இருந்­தி­ருக்கும். எனினும், நீதி­மன்­றமும், மத்­திய அரசும், இப்­பி­ரச்­னையில் தெளி­வான முடிவை அறி­விக்­காத­ வரை, இந்­தி­யாவில் முத­லீடு செய்­வ­தில்லை என்ற எங்கள் முடிவில் மாற்றம் இருக்­காது.பவன் கோயங்கா, செயல் இயக்­குனர், மகிந்­திரா அண்டு மகிந்­திரா: சுப்ரீம் கோர்ட், டீசல் கார் பிரச்­னைக்கு முற்­றுப்­புள்ளி வைத்­துள்­ளது. இனி, 2020, ஏப்­ரலில் அம­லுக்கு வரும், ‘பி.எஸ்., – 6’ சுற்­றுச்­சூழல் விதி­மு­றை­களின் படி கார்­களை தயா­ரிப்­பதில் கவனம் செலுத்­துவோம்.
ஆர்.சி.பார்­கவா, தலைவர், மாருதி சுசூகி: பாதிக்­கப்­பட்ட வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளுக்கு, நிவா­ரணம் கிடைத்­துள்­ளது. 2,000 சி.சி.,க்கும் குறை­வான காருக்கும் பசுமை வரி விதிக்­கப்­ப­டுமா என, தெரி­யாது. இது­போன்ற தீர்வையை ஒழிக்­கவே மத்­திய அரசு விரும்­பு­கி­றது. அனைத்து தரப்­பி­னரும் கலந்து பேசி பிரச்­னைக்கு தீர்வு காண வேண்டும்.ராகேஷ் ஸ்ரீவத்­சவா, மூத்த துணை தலைவர், விற்­பனை, சந்­தைப்­ப­டுத்­துதல், ஹுண்டாய் மோட்டார் இந்­தியா: வாகன துறையில் முத­லீ­டு­களை அதி­க­ரிக்க, சாத­க­மான வரி விதிப்பு முறையும், புதிய தொழில்­நுட்­பங்­களை ஊக்­கு­விக்கும் நட­வ­டிக்­கையும் அவ­சியம்.ஜோ கிங், தலைவர், ஆடி இந்­தியா: டில்­லியில், டீசல் கார்­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட தடையால், பலர் வேலை இழந்­துள்­ளனர்; கார் முக­வர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். நீண்ட கால அடிப்­ப­டையில், நிலை­யான கொள்­கையை உரு­வாக்­கு­வதே வளர்ச்­சிக்கு உதவும். மெர்­சிடஸ் பென்ஸ்: பசுமை வரி செலுத்­து­வதால், தன் டீசல் கார்கள், சுற்­றுச்­சூ­ழலை பாதிப்­ப­தாக அர்த்­த­மில்லை என, இந்நிறுவனம் தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)