பதிவு செய்த நாள்
18 ஆக2016
07:07
புதுடில்லி : ‘போர்டு’ நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், தானியங்கி கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள, போர்டு மோட்டார் நிறுவனம், டிரைவர் இல்லாமல் இயங்கக் கூடிய, தானியங்கி கார்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, தானியங்கி கார்களை, வாடகை கார் நிறுவனங்களுக்கு வழங்கவும், அதற்கு பின் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யவும், போர்டு திட்டமிட்டு உள்ளது. மெர்சிடஸ் பென்ஸ், டெஸ்லா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், ஏற்கனவே தானியங்கி கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளன. இதுகுறித்து, போர்டு நிறுவவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எங்கள் நிறுவனம், தானியங்கி வாகனங்கள் தயாரிக்க முடிவு செய்திருப்பதன் மூலம் வாகன தயாரிப்பில் அடுத்த கட்டத்திற்கு செல்கிறது. இந்த தானியங்கி வாகனங்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்படும்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|