பதிவு செய்த நாள்
22 ஆக2016
14:56
சேலம்:''ஆவணி மாதம், திருமண சீசன் துவங்கி உள்ளதால், தினசரி சராசரி தங்கம் விற்பனை, 100 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது,'' என, தமிழக தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் உதவி தலைவர் ஸ்ரீராம் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஆடி மாதம், தங்க ஆபரணங்கள் விற்பனையில் கடும் சரிவு காணப்பட்டது. இந்தியாவின், ஆண்டு சராசரி தங்கம் விற்பனை, மூன்று லட்சம் கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும், ஆண்டுக்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை, தங்கம் விற்பனையாகிறது.தமிழகத்தில், தினசரி சராசரி தங்கம் விற்பனை, 60 கோடி ரூபாயாக இருந்து வந்த நிலையில், ஆடி மாதம் விற்பனையில், 50 முதல், 60 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டது. தற்போது, ஆவணி பிறந்துள்ள நிலையில், தங்கம் விற்பனை அதிகரித்து வருகிறது.ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த தினமான, ஆக., 17ம் தேதி, 100 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. இதே அளவில், சராசரியாக தினமும் விற்பனை நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|