பதிவு செய்த நாள்
23 ஆக2016
04:49
ஆமதாபாத் : இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பிளாஸ்டிக் துறையின் பங்கு, 15 சதவீதமாக இருப்பதாக, இந்திய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
இந்தியாவில், குறு, சிறு மற்றும் நடுத்தர பிரிவைச் சேர்ந்த, 50 ஆயிரம் நிறுவனங்கள், பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியில், குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களின் பங்கு, 65 சதவீதம் உள்ளது. குஜராத்தில், பிளாஸ்டிக் தொழில் துறையை ஊக்குவிக்க, அம்மாநில அரசு, நிதி உதவி உள்ளிட்ட பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால், அந்த மாநிலத்தில் பிளாஸ்டிக் துறை, ஆண்டுதோறும், 20 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள், பிளாஸ்டிக் தொழிலை ஊக்குவிக்க, மானியம் வழங்குவதுடன், வரிவிதிப்பில் சலுகைகள் வழங்க வேண்டும் என, கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|