பதிவு செய்த நாள்
23 ஆக2016
04:50
புதுடில்லி : மேற்குவங்கத்தில், 20 ஹெக்டர் பரப்பில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த சேவைகள் துறைக்கான, சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான திட்டத்தை, இன்போசிஸ் நிறுவனம், 2014ல், மத்திய அரசிடம் வழங்கியது.
இதற்கு, மேற்குவங்க சிறப்பு பொருளாதார மண்டல மேம்பாட்டு ஆணையம், கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. எனினும், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க அரசு, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க, கொள்கை அளவில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதனால், இன்போசிஸ் நிறுவனத்தின் திட்டத்தை ஏற்பது குறித்து, கருத்து தெரிவிக்காமல் உள்ளது.
இதையடுத்து, சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி வழங்கும் வாரியக் குழு, இன்போசிஸ் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ‘மேற்குவங்க அரசின் ஒத்துழைப்பு இல்லாமல், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க முடியாது’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|