பதிவு செய்த நாள்
27 ஆக2016
04:56
மும்பை : ரிசர்வ் வங்கி, வாராக் கடன் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் வங்கிகளை காக்கும் நோக்கில், புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வரும், 2017 – 18ம் நிதியாண்டு முதல், ‘குறிப்பிடத்தக்க கடன்தாரர்’ என்ற பிரிவு அமலுக்கு வர உள்ளது. முதற்கட்டமாக, 25,000 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வங்கிக் கடன் உள்ள நிறுவனங்கள், இப்பிரிவில் சேர்க்கப்படும். இந்த வரம்பு அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளில், 10,000 கோடி ரூபாயாக குறைக்கப்படும். இதன்படி, நிறுவனங்கள், நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்கு மேல் கடன் பெறும் பட்சத்தில், அதற்கான, இடர்பாடுகளை சமாளிக்க, குறிப்பிட்ட தொகையை வங்கிகள் ஒதுக்க வேண்டும். அத்துடன், கூடுதல் பிணையும், நிறுவனங்களிடம் கோர வேண்டும். இதனால், நிறுவனங்களின் வங்கிக் கடன் செலவு அதிகரிக்கும். பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா ஸ்டீல் போன்ற பெரிய நிறுவனங்கள் பாதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|