பதிவு செய்த நாள்
28 ஆக2016
01:45
கோல்கட்டா:மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில், தொழில்துறை பயிலரங்கம் நடைபெற்றது. இதில், சி.ஐ.ஐ., கிழக்கு மண்டல செயல்திட்டப் பிரிவு தலைவர் மோலோய் பானர்ஜி பேசியதாவது:இந்திய தொழிலக கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரும், தொழில் தர்மம் தொடர்பான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவை, தொழிலில் நேர்மை, நாணயம் ஆகியவற்றை கடைபிடிப்பதற்கான அடிப்படை கொள்கைகளைக் கொண்டவை.அவற்றை கடைபிடிப்பதாக ஒவ்வொரு உறுப்பினரும், உறுதிமொழி எடுக்க வேண்டும். தன்னிச்சையாக பின்பற்ற வேண்டிய, இந்த எளிமையான நடைமுறை, நேர்மையாகவும், நியாயமாகவும் தொழில் செய்வதற்கான முதல்படி ஆகும்.
நம்மை நாமே ஒழுங்குபடுத்திக் கொள்வதா அல்லது சட்டங்களால் நாம் ஒழுங்குப்படுத்தப்பட வேண்டுமா என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். நேர்மையான முறையில் செயல்பட்டு, லாபகரமாக நிறுவனத்தை நடத்திச் செல்ல, சுய முனைப்புடன் செயல்படும் வலிமையான தலைமை தேவை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|