பதிவு செய்த நாள்
30 ஆக2016
04:40
புதுடில்லி : இந்திய – அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு மற்றும் பி.டபிள்யு.சி., நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விபரம்: கடந்த இரு ஆண்டுகளாக, இந்தியா – அமெரிக்கா இடையிலான பரஸ்பர உறவு மேம்பட்டுள்ளது. விசா வழங்குவதும், பிரமுகர்களின் வருகையும் அதிகரித்துள்ளன; வர்த்தகம் ஏற்றம் கண்டு வருகிறது. இரு நாடுகளும், பரஸ்பர வர்த்தகத்தை, 10 ஆயிரம் கோடியில் இருந்து, 50 ஆயிரம் கோடி டாலராக உயர்த்த விரும்புகின்றன. உலகின் முக்கிய முதலீட்டு மையமாக இந்தியா திகழ்கிறது. குறிப்பாக, விமானம், பாதுகாப்பு, வங்கி, காப்பீடு, ரசாயனம் உள்ளிட்ட, 10 துறைகள், உள்நாட்டு வளர்ச்சியுடன், சர்வதேச வர்த்தக மையமாக, இந்திய வலுப்பெற உதவும். இத்துறைகளில், அரசின் கூட்டு திட்டங்கள் சிறந்த பயன்களை அளித்து வருகின்றன. துறைமுகம், உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து, எண்ணெய் மற்றும் எரிவாயு, மருந்து, மின்னணு துறைகளிலும், வளர்ச்சி வாய்ப்பு அதிகமுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|