பதிவு செய்த நாள்
30 ஆக2016
17:08
மும்பை : பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாம் நாளில் அதிரடியாக நிறைவடைந்தது. சென்செக்ஸ் 440 புள்ளிகளும், நிப்டி 137 புள்ளிகளும் உயர்வுடன் முடிந்தன.
இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே உள்ளூர் பங்குகளும் சரி, வெளிநாட்டு பங்குகளும் சரி நல்ல ஏற்றத்துடன் ஆரம்பமாகின. தொடர்ந்து முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியதால் வர்த்தகம் நாள் முழுக்க அதிக உயர்வுடன் காணப்பட்டன. குறிப்பாக சென்செக்ஸ் மீண்டும் 28 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. வர்த்தகம் முடியும் தருவாயிலும் அப்படியே இருந்தது.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 440.35 புள்ளிகள் உயர்ந்து 28,343.01-ஆகவும், நிப்டி 136.90 புள்ளிகள் உயர்ந்து 8,744.35-ஆகவும் இருந்தன. வர்த்தகமுடிவில் 1623 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 1076 புள்ளிகள் சரிந்தும், 228 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|