பதிவு செய்த நாள்
02 செப்2016
14:30
பேட்டரி தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுவதிலும் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போன்களை திரும்பப் பெற சாம்சங் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தென்கொரியாவின் யோன்ஹாப் நியூஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போனின் பேட்டரி வெடிப்பதாக வந்த புகார்களை அடுத்து, இந்த வார இறுதியில் சாம்சங் திரும்பப் பெற உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இது பற்றி கருத்து தெரிவிக்க சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. அதே சமயம், புகார்கள் குறித்து பங்குதாரர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக சாம்சங் கூறி உள்ளது. தங்கள் நிறுவனம் உயர்தர பொருட்களையே வாடிக்கையாளர்களுக்கு வழங்க உறுதி பூண்டுள்ளதால், புகாருக்கான உண்மை காரணம் குறித்து விரைவில் கண்டறியப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான கேலக்சி நோட் 7 போன்றகளை 2 வாரங்களுக்கு முன் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பேட்டரி வெடிப்பதாக எழுந்துள்ள புகார்கள் காரணமாக சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனையை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. பேட்டரி வெடித்த விவகாரம் குறித்து தென்கொரியாவில் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், நேற்று சீனாவில் கேலக்சி நோட் 7 ஐ சாம்சங் அறிமுகம் செய்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|