பதிவு செய்த நாள்
03 செப்2016
02:57
புதுடில்லி : டில்லியில், நுால் வெளியீட்டு விழா ஒன்றில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்தியா, பல்வேறு நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. அதில், பல்துறை வல்லுனர்களுக்கான பரஸ்பர அங்கீகார ஒப்பந்தமும் அடங்கும்.இந்த ஒப்பந்தம், இந்தியாவைச் சேர்ந்த பல் மருத்துவர்கள், இயன்முறை மருத்துவர்கள், பொறியாளர்கள், கட்டடக் கலை வல்லுனர்கள் உள்ளிட்டோர், பல்வேறு நாடுகளில் பணிபுரிவதற்கான அங்கீகாரத்தை வழங்குகிறது. அதுபோல, ஒப்பந்த நாடுகளின் வல்லுனர்களும், இந்தியாவில் பணிபுரியலாம்.
ஆனால், பல நாடுகள், இவ்வகை அங்கீகாரம் வழங்கினால், உள்நாட்டு மக்களின் வேலைவாய்ப்பு பாதிக்கும் என, அஞ்சுகின்றன. அதனால், பரஸ்பர அங்கீகார ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் தாமதித்து வருகின்றன. மத்திய வர்த்தக அமைச்சகம், இந்த கால தாமதம் குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|