பதிவு செய்த நாள்
04 செப்2016
04:11
புதுடில்லி:பொது துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க, புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., தலைவரும், நிர்வாக இயக்குனருமான அனுபம் ஸ்ரீவத்சவா கூறியதாவது:செப்., 9 முதல், ‘எக்ஸ்பீரியன்ஸ் அன்லிமிடெட் பி.பி. 249’ என்ற பிராட்பேண்ட் சேவை அறிமுகமாகிறது.
இந்த கேபிள் வழியிலான, தடையில்லா இணைய சேவைக்கு, சந்தாதாரர்கள், 249 ரூபாய் செலுத்தி, மாதம், 300 ஜி.பி., வரை தகவல்களை பதிவிறக்கலாம். அதாவது, 1 ஜி.பி., தகவலை பதிவிறக்க, 1 ரூபாய் மட்டுமே செலவாகும். 2 ஜி.பி., டேட்டா வேகத்தில், இவ்வளவு குறைந்த கட்டணத்தில், நாட்டிலேயே பி.எஸ்.என்.எல்., மட்டுமே இத்தகைய சேவையை வழங்க உள்ளது. இந்த சேவையை பெறும் சந்தாதாரர்கள், ஆறு மாதங்களுக்குப் பின், தங்களுக்கு விருப்பமான, ‘ரெகுலர்’ சேவை திட்டங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து, மாறிக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|