பதிவு செய்த நாள்
07 செப்2016
07:35
சென்னை : தனியார் வங்கிகளில், சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரிய மிக்க வங்கியான, கரூர் வைஸ்யா வங்கி, நுாற்றாண்டு விழாவை கொண்டாட இருக்கிறது.
ஜனாதிபதி வருகிறார்இதுகுறித்து இவ்வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான வெங்கடராமன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள கரூரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் கரூர் வைஸ்யா வங்கி, 1916ம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது, 100 ஆண்டுகள் என்ற மைல் கல்லை எட்டியுள்ள இந்தியாவின் வெகுசில வங்கிகளுள் ஒன்று என்ற பெருமையை, கரூர் வைஸ்யா வங்கி பெற்றுள்ளது. வங்கியின் நுாற்றாண்டு விழாவை, வரும், 10ம் தேதி, சென்னையில் கொண்டாட உள்ளோம். அன்றைய தினம், சென்னை பல்கலைக்கழக நுாற்றாண்டு விழா அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தற்போது, கரூர் வைஸ்யா வங்கிக்கு, நாடு முழுவதும், 683 கிளைகள்; 1,691 ஏ.டி.எம்.,கள்; 386 பணம் செலுத்தும் இயந்திரங்கள் உள்ளன.
புதிய தொழில்நுட்பங்கள்‘தங்க தொலைநோக்கு திட்டம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட்ட ஒரு திட்டமானது, வங்கியை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது. எங்கள் வங்கி, வாடிக்கையாளர் விரும்பும் வகையில் இணையதள வங்கி சேவை, மொபைல் வங்கி சேவை என, புதிய தொழில்நுட்ப சேவைகளை அறிமுகம் செய்து, தரமான சேவை வழங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|