பதிவு செய்த நாள்
07 செப்2016
07:36
விசாகப்பட்டினம் : ‘‘சர்வதேச மந்தநிலையிலும், இந்தியாவின் ஏற்றுமதி நியாயமான வளர்ச்சியை கண்டு வருகிறது,’’ என, எக்சிம் பேங்க் தலைவரும், நிர்வாக இயக்குனருமான யதுவேந்திர மாதுார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: ஏற்றுமதியை பொருத்த வரை, இதர நாடுகளை விட, இந்தியா, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எக்சிம் வங்கி, மேலும் பல ஆசிய, ஆப்ரிக்க நாடுகளுக்கு, ஏற்றுமதிக்கான கடனுதவியை விரிவுபடுத்தியுள்ளது. பல ஏற்றுமதி திட்டங்களுக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது.
ஆந்திராமத்திய அரசின், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ நல்ல திட்டம் தான். ஆனால், அது மட்டுமே நம் வளர்ச்சிக்கு போதாது. சர்வதேச சந்தைகளுக்கும் நாம் பொருட்களை தயாரிக்க வேண்டும். இந்திய நிறுவனங்களின் பொருட்கள், சர்வதேச சந்தையில் இடம்பெற வேண்டும். ஏற்றுமதியில், ஆந்திராவின் பங்கு, குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும். துறைமுகம் சார்ந்த வளர்ச்சித் திட்டங்களில், ஆந்திர அரசு தீவிரமாக உள்ளது. ஏற்றுமதி தொடர்பாக, ஆந்திர அரசுடன், எக்சிம் பேங்க், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
திரைப்படம்வங்கி, இந்திய திரைப்படங்களுக்கு தொடர்ந்து நிதியுதவி செய்து வருகிறது. ஒரு படத்திற்கு, அதிகபட்சமாக, 50 கோடி வரை நிதியுதவி அளிக்கப்படுகிறது. நடுத்தர நிறுவனங்கள், வெளிநாடுகளில், ‘மசாலா பாண்டு’களை வெளியிட்டு நிதி திரட்டிக் கொள்கின்றன. இதுபோன்ற நிறுவனங்களுக்கு உதவ, எஸ்.பி.ஐ., கேப்பிடல் உடன் ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|