பதிவு செய்த நாள்
10 செப்2016
07:34
பெங்களூரு : மைந்த்ரா நிறுவனம், ‘டிரை அண்டு பை’ என்ற புதிய திட்டத்தினை, சோதனை ரீதியாக அறிமுகம் செய்துள்ளது.
மைந்த்ரா நிறுவனம், இணையதளம் வணிகம் மூலம், ஜவுளி உள்ளிட்ட பேஷன் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. மக்கள், இணையதளம் மூலம் வாங்கும் பொருட்களில், முழு திருப்தியடைவதற்காக, ‘டிரை அண்டு பை’ என்ற திட்டத்தை துவக்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், ஆடைகள், காலணிகள் உள்ளிட்டவற்றை அணிந்து, டிரையல் பார்த்து வாங்கும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். மேலும், அணிந்து பார்த்து முடிவு செய்ய வசதியாக, வீட்டிற்கோ, அலுவலகத்திற்கோ, வாடிக்கையாளர்கள் விரும்பும் இடத்திற்கு டெலிவரி செய்யப்படும். இந்த திட்டத்தை ஐதராபாத், கோல்கட்டா, பூனா, சென்னை, ஆமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில், சோதனை ரீதியில் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வாடிக்கையாளர்கள், ‘டிரை அண்டு பை’ திட்டத்தின் மூலம், பொருட்களை வாங்கும் போது, நேரடியாக கடைக்கு சென்று வாங்கிய அனுபவத்தை அடைவர். இதன் மூலம், இணையதள வணிகம் மேலும் அதிகரிக்கும்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|