பதிவு செய்த நாள்
10 செப்2016
07:35
புதுடில்லி : ‘நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஆகஸ்டில், 5.50 சதவீதமாக குறைந்திருக்கும்’ என, ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.
இந்நிறுவனம், நாட்டின் பணவீக்கம் குறித்து, பொருளாதார வல்லுனர்கள், 27 பேர் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது.
விலை வீழ்ச்சிஅதன் விபரம்: கடந்த ஆகஸ்டில், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள், எதிர்பாராத அளவிற்கு விலை வீழ்ச்சி கண்டன. இதன் காரணமாக, நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், 5.50 சதவீதமாக குறைந்திருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, முந்தைய ஜூலையில், 6.07 சதவீதமாக இருந்தது. அதேசமயம், இதே காலத்தில், மொத்த விலை பணவீக்கம், 3.55 சதவீதத்தில் இருந்து, 4.01 சதவீதமாக உயர்ந்திருக்கும் என, கணிக்கப்பட்டு உள்ளது.
வட்டி விகிதம்ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டில், நாட்டின் பணவீக்க இலக்கை, ஐந்து சதவீதமாக நிர்ணயித்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக, நாட்டின் பணவீக்கம், ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கை விட, அதிகமாக உள்ளது. அதனால் ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்டி விகிதங்களை குறைக்க, சிறிதளவே வாய்ப்பு உள்ளது. கடந்த, 2015 முதல் ரிசர்வ் வங்கி, 1.5 சதவீதம் வரை, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|