பதிவு செய்த நாள்
13 செப்2016
07:43
மும்பை : அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம், நிதி, காப்பீடு உள்ளிட்ட வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், 16 ஆயிரத்து, 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ரிலையன்ஸ் கேப்பிடல், அதன் நிதி வர்த்தகத்தை பிரித்து, ரிலையன்ஸ் கில்ட்ஸ் என்ற துணை நிறுவனத்துடன் இணைக்க உள்ளது. இதையடுத்து, ரிலையன்ஸ் கில்ட்ஸ் நிறுவனம், ரிலையன்ஸ் கமர்சியல் பைனான்ஸ் என்ற புதிய பெயரில் செயல்படும். ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் நிதிப் பிரிவை தனியே பிரித்து, துணை நிறுவனத்துடன் இணைக்கும் திட்டத்திற்கு, சமீபத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், பங்குதாரர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. ரிலையன்ஸ் கமர்சியல் பைனான்ஸ் நிறுவனம், ஒருங்கிணைந்த நிதிச் சேவைகளை வழங்குவதற்கான பிரிவில் சேர்க்க, ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பிக்க உள்ளது. இதையடுத்து, வங்கிச் சேவையில் களமிறங்கும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|