பதிவு செய்த நாள்
16 செப்2016
07:24
புதுடில்லி : எச்.பி.எல்., எலக்ட்ரிக்: எச்.பி.எல்., எலக்ட்ரிக் நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 361 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது. எச்.பி.எல்., எலக்ட்ரிக், மீட்டர், சுவிட்ச்கியர்ஸ் உள்ளிட்ட மின் சாதனங்கள் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 361 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது. இதன் பங்கு வெளியீடு, வரும், 22ம் தேதி துவங்கி, 26ல் முடிவடைகிறது. ஒரு பங்கின் விலை, 175 ரூபாய் – 202 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எஸ்.பி.ஐ., கேபிடல் மார்கெட்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ் ஆகியவை, எச்.பி.எல்., எலக்ட்ரிக் பங்கு வெளியீட்டு பணிகளை மேற்கொள்ள உள்ளன.
ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல்: ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் கம்பெனி, ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு, வரும், 19ம் தேதி துவங்கி, 21ல் முடிவடைகிறது. ஒரு பங்கின் விலை, 300 ரூபாய் முதல், 334 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|