பதிவு செய்த நாள்
16 செப்2016
07:25
சென்னை : ‘டாபே’ எனப்படும், ‘டிராக்டர்ஸ் அண்ட் பார்ம் எக்யூப்மென்ட்’ நிறுவனம், நவீன வகை டிராக்டர்களை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து, டாபே நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான மல்லிகா ஸ்ரீனிவாசன் கூறியதாவது: எங்கள் நிறுவனம், டிராக்டர் உற்பத்தியில், சர்வதேச அளவில், மூன்றாவது பெரிய நிறுவனமாகவும், இந்தியாவில், இரண்டாவது நிறுவனமாகவும் உள்ளது. ஆண்டுதோறும், 1.50 லட்சம் டிராக்டர்களை விற்பனை செய்கிறோம். தற்போது, மாஸே பெர்குசான் டிராக்டர்களில், ‘ஸ்மார்ட்’ வரிசை மற்றும் ‘பிரிமியம் காம்பேக்ட் யூடிலிட்டி டிராக்டர்’ ஆகிய நவீன டிராக்டர்களை அறிமுகம் செய்துள்ளோம்.
இந்தியாவில், முதல் முறையாக, எங்கள் நிறுவனமே, ‘காம்பேக்ட்’ டிராக்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த டிராக்டர் அளவில் சிறியதாக இருந்தாலும், பெரிய டிராக்டரில் உள்ள அனைத்து அம்சங்களும், நவீன வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த டிராக்டரை, குறைந்த அளவு நிலத்தில் கூட பயன்படுத்த முடியும். விவசாயிகள், ஆண்டுக்கு, சராசரியாக, 70 நாட்கள் மட்டும் டிராக்டர் பயன்படுத்துகின்றனர். ஆனால், ‘காம்பேக்ட்’ டிராக்டர்களை, விவசாயம் தவிர, கால்வாய் வெட்டுதல், மணல் அள்ளுதல் என,
பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தலாம். இளம் விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை, காம்பேக்ட் டிராக்டர் பூர்த்தி செய்யும். ‘ஸ்மார்ட் சீரிஸ்’ டிராக்டர்களில், ‘எலக்ட்ரோ ஹைட்ராலிக், கியர்பாக்ஸ், இன்ஜின்’ உள்ளிட்ட அனைத்தும், நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த டிராக்டருக்கு, ‘ஸ்மார்ட் கீ’ உள்ளது. இதன் மூலம், டிராக்டர் எங்கு உள்ளது என்பதை அறிவதுடன், ‘லாக்’ செய்யவும் முடியும். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிராக்டர்கள், இந்தியாவில், வேளாண் உற்பத்திக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|