பதிவு செய்த நாள்
16 செப்2016
07:26
சிங்கப்பூர் : சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத, வேளாண் துறை வளர்ச்சி, கிராமப்புற முன்னேற்றம் உள்ளிட்டவற்றுக்காக, தனியார் நிறுவனங்கள் இணைந்து, சர்வதேச கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.
ஜி.ஏ.ஏ., என, சுருக்கமாக அழைக்கப்படும், சர்வதேச வேளாண் வர்த்தக கூட்டமைப்பின் துவக்க விழா, சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளில் இருந்து, 300க்கும் அதிகமான வேளாண் வர்த்தக பிரதிநிதிகள் பங்கேற்றனர். உலகளவில், உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், பருப்பு, ரப்பர் உள்ளிட்ட விவசாயப் பொருட்களின் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள, 36 முன்னணி நிறுவனங்கள் இணைந்து, ஜி.ஏ.ஏ.,–வை உருவாக்கி உள்ளன.
இந்த அமைப்பு, சர்வதேச வேளாண் நிறுவனங்களை ஒன்றிணைத்து, சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத விவசாய நடைமுறைகள், ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட, பல்வேறு அம்சங்களில் பயனுள்ள ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை வழங்கும். விவசாயப் பகுதிகளை சுற்றியுள்ள கிராமத்தினருக்கு, வேலை வழங்குவதுடன், முதலீட்டு வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும். பருவநிலை மாற்றங்களை எதிர்கொண்டு, வேளாண் உற்பத்தியை பெருக்கவும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் பாடுபடும்.
இதுகுறித்து, எஸ்.டி.ஜி., திட்டத்திற்கான, ஐ.நா., பொதுச் செயலரின் தனி ஆலோசகர் டேவிட் நபரோ கூறியதாவது: ஐ.நா.,வின் எஸ்.டி.ஜி., திட்டம், 2030க்குள், வறுமை ஒழிப்பு, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது ஆகியவற்றின் மூலம், நம் வாரிசு களுக்கு பாதுகாப்பான, வளமான, ஆரோக்கியமான புதிய உலகை படைக்க உறுதி பூண்டுள்ளது. இப்பணியில், ஜி.ஏ.ஏ., இணைந்திருப்பது பாராட்டத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|